குமரியில் நாகர்கோவில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் 127 கி.மீ. தூரத்தை உள்ளடக்கி 1984 முதல் இயங்கி வருகிறது. குழித்தறையில் ரயில்வே போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, 2025 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நேற்று குழித்துறை ரயில்வே கட்டிடத்தில் புதிய போலீஸ் நிலையத்தை திருச்சி ரயில்வே போலீஸ் எஸ்.பி. ராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். திருவனந்தபுரம் கோட்ட பாதுகாப்பு ஆணையர் உட்பட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.














