நாகர்கோவில் மாநகராட்சி 27-வது வார்டுக்குட்பட்ட வடிவீஸ்வரம் பறைக்கண்கால் கால்வாய் தடுப்புச்சுவர் கட்டும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் கோபால சுப்பிரமணியன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.














