கருங்கல், மாங்கரை பகுதியைச் சேர்ந்த அஜித் (22) என்ற மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர், முள்ளங்கினாவிளை பகுதியைச் சேர்ந்த சுகுமார் மற்றும் ராயப்பன் ஆகியோருடன் இருந்த முன்விரோதம் காரணமாக, நேற்று கம்பால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக கருங்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் ராயப்பன், சுகுமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














