விளவங்கோடு: 2 வாகனங்களில் 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

0
214

கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை தனி வட்டாட்சியர் K. M. பாரதி தலைமையிலான குழுவினர், 19-ம் தேதி அதிகாலையில் திருத்துவபுரம் பகுதியில் சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1500 கிலோ ரேஷன் அரிசியையும், காரோடு பகுதியில் மற்றொரு சொகுசு காரில் 2000 கிலோ அரிசியையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி காப்புக்காடு அரசு நுகர் பொருள் வாணிபகழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. வாகனங்கள் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here