மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்த சதீஷ் – கிரிஜா தம்பதியின் மகள் மோனிஷா (21), கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். சம்பவ தினத்தன்று மருத்துவமனை விடுதியில் இருந்த மோனிஷாவை திடீரென காணவில்லை என அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. பல இடங்களில் தேடியும் மோனிஷா குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், தாயார் கிரிஜா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோனிஷாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.














