இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகரக் கிளை சார்பில் ‘குமரியின் குரல்’ என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, கோட்டாறு நாராயண குரு சிலை வரை சென்றடைந்தது. இந்தப் பேரணியின் போது, புற்றுநோய், போதை இல்லா குமரி, நீர்நிலை மற்றும் கனிமவள பாதுகாப்பு போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.














