மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தங்கம் (70) என்பவரை, அவரது தம்பி மணிகண்டன் (59), அவரது மனைவி மீனாராணி (50) மற்றும் மேலும் இருவர் சேர்ந்து தாக்கி, வீட்டின் காம்பவுண்ட் சுவரையும் இடித்தனர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த தங்கம் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணவாளக்குறிச்சி போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.














