தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்ரவரி 17) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பகுதியில், 1000 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றும் மின் உற்பத்தி நிலையம் ரூ. 5,320 கோடி முதலீட்டுடன் பொதுத்துறை, தனியார் பங்களிப்புடன் உருவாகும் என்றும், முதற்கட்ட ஆய்வுகள் நிறைவடைந்துள்ளது என்றும் அறிவித்துள்ளார்.














