கிள்ளியூர் வட்டார சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆர் கோமதி, மின்னி பீயூலா ஜோஸ் மற்றும் மருத்துவர் ஆர் ரமணி ஆகியோர் கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்கினர். கிள்ளியூர் வட்டார விவசாய குழு தலைவர் கோபால் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.














