ரஷ்யாவைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களுக்குச் சென்று ஆன்மீக ஓட்டம் மேற்கொண்டனர். திக்குறிச்சி மஹா தேவர் கோயிலுக்கு வந்தபோது, அவர்கள் பக்தர்களுடன் வரிசையில் நின்று காணிக்கை செலுத்தி, விபூதி பிரசாதம் பெற்றுக்கொண்டனர். பின்னர், கோயிலின் முன் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இந்தியாவின் ஆன்மீக கலாச்சாரம் தங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.














