மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் உரையாற்றினார்.
அதைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ”நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு இந்தாண்டு பட்ஜெட் எவ்வாறு தனது பங்களிப்பை அளிக்கும் என்பதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவாக விளக்கினார்.
விரைவான சீர்திருத்தங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு, திறன்மேம்பாடு, அடுத்த தலைமுறை கட்டமைபுக்கான நடவடிக்கைகள், சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கான முயற்சிகள், கல்வி மற்றும் இதர துறை நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்தார். முதலீட்டு செலவினம் ரூ.17.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.4 சதவீதம் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.



