குளச்சல் துறைமுக தெருவைச் சேர்ந்த மீனவரான ஜான் ராபின் (21), காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். செவ்வாய் இரவு அறைக்குச் சென்றவர், நேற்று மதியம் வெளியே வராததால், கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. குளச்சல் போலீசார் உடலை மீட்டு, அவர் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.














