விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையிலான குழு, நட்டாலம் பகுதியில் ஒரு டெம்போவை சோதனை செய்தது. அதில் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் 900 லிட்டர் மானிய விலை வெள்ளை மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். வாகனம் மற்றும் மண்ணெண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மண்ணெண்ணெயை இனயம் மீனவர் கூட்டுறவு சங்கத்திலும், வாகனத்தை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.














