கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பருவ நெல் சாகுபடி நிறைவடைந்து, தற்போது நெற்பயிர்கள் விளைச்சலுக்கு வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, வீர நாராயண மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. விவசாயிகள் அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் விரைவில் அறுவடை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.














