இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (25) என்ற கோயில் பூசாரி, இசக்கியம்மன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தபோது, ஸ்ரீகுமார் (39) என்பவர் அவர் மீது செருப்பை வீசி, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த விஷ்ணு அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் ஸ்ரீ குமாரை கைது செய்தனர்.














