25 வருடம்… 20 திரைப்படங்கள்… 85 வசீகர பாடல்கள் – கவுதம் வாசுதேவ் மேனன் நேர்காணல்

0
24

சினி​மா​வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்​திருக்​கிறார் இயக்​குநர் கவுதம் வாசுதேவ் மேனன். ‘மின்​னலே’-​வில் தொடங்​கிய அவரது திரைப் பயணத்​தில் 20 படங்​களை இயக்கி இருக்​கிறார். இதை அடுத்து ‘என்​னோடு வா வீடு​வரைக்​கும்’ என்ற இசை நிகழ்ச்​சியை நடத்தி முடித்​திருக்​கிறார். சமீபத்​தில் அவருடன் உரை​யாடிய​தில் இருந்து…

Q

அமை​தியா ஒரு நிகழ்ச்​சியை நடத்தி முடிச்​சிருக்​கீங்​க…

A

இந்த மாதிரி ஒரு பங்​ஷன் நடத்​தணும்னு 5 வருஷமா மனசுல இருந்​தது. ‘துருவ நட்​சத்​திரம்’ படப் பிரச்​சினை காரணமா அதைத் தள்ளி வச்​சுட்டே இருந்​தேன். ரெண்டு மூணு வாரத்​துக்கு முன்​னால, இதை ஏன் தள்​ளிவைக்​கணும்னு திடீர்னு தோணுச்​சு. சரி ஒரு ‘பிரைவேட் பங்​ஷ​னா’ நடத்​தலாம்னு அவசரமா பண்​ணினது​தான் அந்த விழா. சூர்​யா, ஜோதி​கா, தாணு சார், வெற்​றி​மாறன், லிங்​கு​சாமி, சசி, அருண் விஜய் மாதிரி ரொம்ப சிலரை மட்​டும்​தான் அழைச்​சிருந்​தேன். சக்​சஸா நடந்​துச்​சு. அடுத்து அதை கொஞ்​சம் பெருசா பண்​ணலாம்னு ஐடியா இருக்​கு.

Q

உங்க படங்​கள்ல வந்த பெரும்​பாலான பாடல்​கள் ஹிட். எப்​படி உங்​களுக்கு மட்​டும் நடக்​குது அப்​படியொரு மேஜிக்?

A

அம்​மாவுக்​குப் பாடல்​கள் பிடிக்​கும். அவங்​களுக்​கும் சினி​மாவுக்​கும் தொடர்பு இல்​லை​னாலும் 50, 60 கள்ல வந்த பாடல்​களை அம்மா மனப்​பாடமா சொல்​லு​வாங்க. அது எந்த படம், யார் பாடுனதுங்கற வரை அவங்​களுக்கு தெரி​யும். அதைப் பார்த்து எனக்​கும் அந்த பழக்​கம் வந்​துச்​சு. நான் படங்​கள் பார்க்க ஆரம்​பிச்​சதும் அப்​படித்​தான். இப்ப எந்த பழைய பாடலைக் கேட்​டாலும் யார் பாடி​யிருக்​காங்க, என்ன படம்ங்​கறதை என்​னால​யும் சொல்ல முடி​யும்.

அப்​படித்​தான் எனக்​குள்​ள​யும் பாடல் ரசனை வந்​திருக்​கும்னு நினைக்கிறேன். அப்​புறம் ஸ்கிரிப்ட் எழுதும்​போது, இந்த இடத்​துல ஒரு பாட்டு வேணும்னா அப்​படியே அதை விட்​டுட்​டுப் போக மாட்​டேன். அதுல எந்த மாதிரி​யான வரி​கள் வரணும்னு என் டீமோட ஆலோ​சிப்​பேன். பிறகு பாடலாசிரியர் தாமரைகிட்ட அதை சொல்​வேன். ‘என்​னோடு வா வீடு வரைக்​கும்’ பாடல் கூட அப்​படித்​தான். அதுக்​குன்னு மெனக்​கெடறது​தான் பாடல்​களின் ஹிட்​டுக்கு காரணம்னு நினைக்​கிறேன்.

Q

இசை அமைப்​பாளர்​களும் உங்​களுக்கு ஸ்பெஷலா பண்​றாங்​களே?

A

ஹாரிஸ் ஜெய​ராஜ், ஏ.ஆர்.ரஹ்​மான் சார், இளை​ய​ராஜா சார் கூட ஒர்க் பண்​ணி​யிருக்​கேன். எனக்கு இப்​படி ஒரு பாட்டு வேணும்னு பொதுவா சொல்​ற​தில்​லை. அதுக்கு என்ன மூடு, என்ன வரி​கள், எல்​லாத்​தை​யும் விவரிப்​பேன். இந்த இடத்​துல பாடல் வைக்​கலா​மா? வேண்​டா​மா? அப்​படிங்கற மாதிரி​யும் டிஸ்​கஷன் நடக்​கும். பிறகு​தான் கம்​போஸிங் இருக்​கும்.

இது​வரை 20 படங்​கள் பண்​ணி​யிருக்​கேன். அதுல ‘நடுநிசி நாய்​கள்​ ‘படத்​துல பாடல் இல்​லை. அது இல்​லாம என் படங்​கள்ல 85 பாடல்​கள் இருக்​கு. ஹாரிஸ் பண்​ணினது 45 பாடல்​கள். இதுல எல்​லாமே அவங்க கொடுத்த ‘பர்​ஸ்ட் ட்யூன்​’ தான். அவங்க ஆப்​ஷன் தர்​றேன்னு சொன்​னாலும் நான், ‘வேண்​டாம், முதல்ல என்ன வருதோ அது போதும்​’னு சொல்​லிடு​வேன். அப்​படி வந்த பாடல்​கள் இப்​ப​வும் ரசிக்​கும்​படியா இருக்​கறது என் அதிர்​ஷ்டம் தான்.

Q

திடீர்னு நீங்க நடிக்க வந்​தது யாருமே எதிர்​பார்க்​காத ஒண்ணு… எப்​படி இருக்கு நடிப்பு பயணம்?

A

இனி அதி​கமா நடிக்க மாட்​டேன்னு நினைக்​கிறேன். ஒரு கட்​டத்​துல அது தேவையா இருந்​தது. இப்ப போதும்னு தோணுது. நடிச்​சுட்டு இருக்​கும்​போதே நான் அதுக்​காக வரலை​யேன்னு எனக்​குள்ள தோணும். நான் இயக்​குநர்​தான். அது​தான் என் இடம். சில இயக்​குநர்​கள் நடிக்​கக் கூப்​பிடும்​போது மறுக்க முடியல. சில விஷ​யங்​களைத் தெரிஞ்​சுக்​கலாம் அப்​படிங்​கறதுக்​காக​வும் நடிக்​கப் போனேன். சில படங்​கள்ல நடிச்​சுட்டு திரும்​பும்​போது, இதை ஏன் பண்​றோம்னு நினைச்​சிருக்​கேன். அதனால நடிகனா என்னை இனி அதி​கமா பார்க்க முடி​யாது.

Q

சரித்​திர, புராணக் கதைகளை இப்ப இருக்​கிற விஷ​யங்களோட இணைக்​கிற மாதிரி படங்​கள் வந்​துட்டு இருக்​கு… உங்​களுக்கு அப்​படி படம் பண்ற ஐடியா இருக்​கா?

A

இருக்​கு. இப்ப என்​கிட்ட ஒரு காதல் கதை இருக்​கு. அதுக்கு யங் ஹீரோ இல்​லை. இப்ப இருக்​கிற இளம் நடிகர்​கள் ஒரு படத்​துலயே சூப்​பர் ஸ்டார் ஆயிடறாங்க. அவங்க கதை கேட்​கவே ரெடியா இல்​லை. அப்​படியே இருந்​தா​லும் காதல் கதை பண்ற ஐடியா இல்​லை. அவங்க வேற மூடுல இருக்​காங்க. நீங்க கேட்​கிற மாதிரி, ஜெயமோகன் சார் கதை ஒண்ணு இருக்​கு. ஆனா அதுக்கு நிறைய விஷ​யங்​கள் சரியா அமையணும்.

Q

உங்க படங்​கள்ல பெண் கதா​பாத்​திரங்​களுக்கு முக்கியத்து​வம் கொடுத்திருக்கீங்களே…

A

ஆமா. நான் இயல்பா எழு​தின கேரக்​டர்​கள்​தான். எங்​கிட்​டயே நிறைய பேர் கேட்​டிருக்​காங்க எப்​படின்​னு. அப்​ப​தான் இவ்​வளவு விஷ​யங்​கள் கவனிக்​கிறாங்களான்னு தோணுச்​சு. என் கதா​பாத்​திரங்​கள் நான் வாழ்க்​கை​யில சந்​திச்ச பெண்​களோட இன்​ஸ்​பிரேஷன்ல எழு​தினது​தான்.

Q

நீங்க எழு​தின ஹீரோ​யின் கேரக்​டர்​கள்ல உங்​களுக்கு ரொம்ப பிடிச்​சது எது?

A

இதை ஒரு காம்​பினேஷ​னா​தான் சொல்​வேன். ‘காக்க காக்க’ மாயாகிட்ட என் அம்​மாவோட சாயல் இருந்​தது. அவங்​களோட 20, 25 வயசு போட்​டோக்​களை பார்த்​திருக்​கேன். ரொம்ப மேட்​சிங்கா டிரெஸ் போட்​டிருப்பாங்க. அப்​படித்​தான் பேசுவாங்க. என் மனை​வியின் நகைச்சுவை தன்​மை​யும் அதுக்​குள்ள இருக்​கும். ‘வேட்​டை​யாடு விளை​யாடு’ ஆராதனா எனக்கு தெரிஞ்ச ஒருத்​தங்​களை வச்சு எழு​தினேன்.

‘விண்​ணைத் தாண்டி வரு​வா​யா’ ஜெஸி, எங்கமேல் வீட்​டிலேயே இருந்​தாங்க. அவங்​களை எனக்கு ரொம்ப நல்லா தெரி​யும். அவங்​ககிட்ட இந்​தப் படம் ரிலீ​ஸாகறதுக்கு ஒரு வாரத்​துக்கு முன்​னால​தான்சொன்​னேன். கேட்​டதும் அப்​செட்டா இருந்​தாங்க. அப்​புறம் படம் காண்​பிச்​சேன். அழுதுகிட்டே பார்த்​தாங்க. அவங்க பெயரை மட்​டும் கதை​யில மாத்​திருக்​கலாமோன்னு தோணுச்​சு. ‘வாரணம் ஆயிரம்’ சமீரா ரெட்டி கேரக்​டர், நான் படிக்​கும் போது எனக்கு ஒரு பிரண்ட் இருந்​தாங்க. அவங்​க​தான். ஆண் கதா​பாத்​திரங்​கள் பார்த்​தீங்​கன்னா அது நான் தான். அதுல வர்ற வில்​லனும் நானாகத்​தான் இருப்​பேன்.

Q

சினிமாவுல ஏ.ஐ தொழில்​நுட்​பத்தோட தாக்கம் பற்றி என்ன நினைக்​கிறீங்க?

A

அது, கிரியேட்​டிவ் சைட்ல நிறைய உதவியா இருக்​கு. நிறைய ஐடி​யாஸ் கிடைக்​குது. ஆனா, முழுசா அதை நம்ப முடி​யாது. என்ன தொழில்​நுட்​பம் வந்​தா​லும் நீங்க ஹீரோவை மாத்த முடி​யாதே. அந்த நடிகர், கதைக்கு என்ன பண்​றார்ங்​கறது முக்​கி​யம். அதை வச்​சு​தான் இயக்​குநர் அடுத்த கட்​டம் போக முடி​யும். ‘விண்ணை தாண்டி வரு​வா​யா’ கிளை​மாக்​ஸை, ஹீரோ பெர்​பாமன்​ஸ்ல கொடுத்த இன்​புட் வச்​சு​தான் முடிவு பண்​ணினேன். ‘என்னை அறிந்​தால்’ படத்​துல​யும் ஒரு விஷ​யம் பண்​ணினோம். அது முக்​கி​யம். அதை ஏ.ஐ.​யால பண்ண முடி​யாது.

Q

கிளை​மாக்ஸை முதல்​ல எழுத​மாட்​டீங்​கன்னு உங்க மேலயும் விமர்​சனங்​கள் இருக்​கு…

A

அது உண்​மை​யில்​லை. எல்​லாமே பேப்​பர்ல இருக்​கும். ‘விண்​ணைத்​தாண்டி வரு​வா​யா’ படத்​துக்கு ஒரு கிளை​மாக்ஸ் எழுதி வச்​சிருந்​தேன். எப்​படின்​னா, ஹீரோ, சிரஞ்​சீவி நடிக்​கிற படத்தை ஷுட் பண்​ணிட்​டிருக்​கார். ‘டைரக்​டர் ஏன் மூட் அவுட்ல இருக்​கார்​’னு சிரஞ்​சீவி கேட்​கிறார். ‘கேர்ள் பிரண்​டுக்கு இன்​னைக்கு கல்​யாணம்​’னு சொல்​றாங்க. ஷூட்​டிங்கை நிறுத்​திட்டு ஒரு ஹெலி​காப்​டர்ல கல்​யாணம் நடக்​கிற இடத்​துக்கு போறாங்க. அங்க என்ன நடக்​குதுன்னு எழு​தி​யிருப்​பேன். சிரஞ்​சீ​வி, ஹெலி​காப்​டர்னு என் டீம் மகிழ்ச்​சியா இருந்​தாங்க.

ஆனா அந்த கிளை​மாக்ஸ் எனக்கே கேவலமா இருந்​துச்​சு. 80 %ஷூட்​டிங் முடிஞ்ச பிறகு​தான் இது அந்த மாதிரி படம் இல்​லை, வேறன்னு தோணுச்​சு. இது​தான் பரிணாமம். நான், ‘தயாரிப்​பாளர்​கிட்ட சொல்​லிட்​டேன், ஹீரோகிட்ட சொல்​லிட்​டேன், மாத்த வேண்​டாம்​’னு நினைச்​சிருந்தா ஆடியன்ஸ் உட்​கார்ந்​திருக்​கவேமாட்​டாங்க. அது​தான் ‘பிலிம் மேக்​கிங்’. இது இப்​படிஇருந்​தா​லும் பெரும்​பாலான படங்​கள்ல முழு ஸ்கிரிப்​டோட​தான் போயிருக்​கேன்.

Q

25 வருட திரைப்​பயணம் எப்​படி இருக்​கு…

A

நல்லா இருந்​திருக்​கு. ‘இதை இப்​படி பண்​ணலா​மா, இவங்​களோட படம் பண்​ணலா​மா’ன்னு எல்​லாத்​தை​யும் நானே முடிவுபண்ணி செயல்​படுத்​தி​ய​தால மகிழ்ச்​சியா தான் இருக்​கு. இந்த பயணத்​துல ஒரு விஷ​யம் என்னை பாதிச்​சிருக்​குனா அது ‘துருவநட்​சத்​திரம்’ தான். வேற எது​வும் இல்​லை.

Q

இந்த பயணத்​துல எதை சக்​சஸா பார்க்​கிறீங்க?

A

‘மின்​னலே’ தான். அந்த படம் பண்​ணும்​போது, மாதவன் மட்​டும்​தான் தெரிஞ்​சவர். மத்தவங்க புதுசு​. அதனால இந்​தப் படத்​தைப் பார்க்க மக்​கள் தியேட்​டருக்கு வரு​வாங்​களான்னு நினைச்​சிருக்​கேன். அப்​ப​தான் ‘வசீக​ரா’ பாடல் ரிலீஸ் ஆச்​சு. பிப்​ர​வரி​யில படம் ரிலீஸ். டிசம்​பர்ல பாடலை ரிலீஸ் பண்​ணினோம். அந்த பாடலைக் கேட்டு அதுக்​காகத்​தான் முதல்ல ஆடியன்ஸ் தியேட்​டருக்கு வந்​தாங்க. இந்​தப் படத்​தோட வெற்​றி​யால​தான் எனக்கு ‘காக்க காக்க’கிடைச்​சது. அதைப் பார்த்​து​தான் கமல் சார் ‘வேட்​டை​யாடு விளை​யாடு’ கொடுத்​தார். அதனால என்​னோட தொடக்​கத்தைதான் முக்​கிய​மான வெற்​றின்னு நினைக்​கிறேன்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here