மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியில் நண்பர்களுடன் ஆட்டோவில் சென்ற அஜின் (33), மற்றொரு அஜின் (32), ஜாபர் (23) ஆகியோரை, அதே பகுதியை சேர்ந்த சர்ஜின் (20) மற்றும் சர்வின் (22) ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் வந்து அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து, நேற்று போலீசார் சர்ஜின், சர்வின் ஆகியோரை கைது செய்தனர்.














