திக்குறிச்சி மஹா தேவர் கோயில் செல்லும் சாலை 18 ஆண்டுகளாக செப்பனிடப்படாததை கண்டித்து விஷ்வஹிந்து பரிஷத் மற்றும் பக்தர்கள் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 18 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட கல்வெட்டிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய அவர்கள், கோயில் பசு மாடு மற்றும் தாமிரபரணி நதிக்கு மனு கொடுத்தனர். இந்த போராட்டத்தில் ஏராளமான வி.ஹெ.ப. நிர்வாகிகள் மற்றும் சிவ பக்தர்கள் கலந்து கொண்டனர்.














