மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து களியக்காவிளையை அடுத்த தையாலுமூட்டில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் அஜய் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவருக்கு செண்டை மேளம் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.














