பத்மநாபபுரம் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் பேட்டரி திருட்டு சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று நடந்த ரோந்து பணியின் போது இரணியலை சேர்ந்த சுபின் (38) மற்றும் சாமியார்மடம் பகுதியை சேர்ந்த செல்வன் (33) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் மேலும் 14 கார்களில் பேட்டரிகளை திருடியிருப்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














