கிள்ளியூர், முளங்குழியைச் சேர்ந்த 31 வயது அஜின், நேற்று புதுக்கடை பகுதியில் சாலையோரம் தனது வாகனத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். குடிப்பழக்கம் கொண்ட அஜின், சொந்தமாக பிக்கப் வாகனம் ஓட்டி வந்தார். இது குறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














