குமரி மலைகிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோதையாறு அரசு ரப்பர் தோட்டம் மற்றும் பேச்சிப்பாறை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் ஒற்றை யானை சுற்றி திரிவதால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.














