மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த சுபைதா (27) – ஜெரின் (27) இருவருக்கும் 2021 ல் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, குழந்தை பிறப்பதைத் தடுக்க கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும்படி கணவர் குடும்பத்தினர் வற்புறுத்தியதாகவும், மேலும் வரதட்சணை கேட்டு சுபைதாவை வீட்டை விட்டு விரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சுபைதா பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், மார்த்தாண்டம் மகளிர் போலீசார் ஜெரின் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.














