கொல்லங்கோடு அருகே சூரியகோடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் துளசிதாஸ் (51) என்பவரின் நிலத்தின் கேட் முன்பு பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் (53) என்பவர் பாறாங்கற்களை இறக்கிப் போட்டு, கேட்டை சேதப்படுத்தி, நிலத்திற்குச் செல்லும் பாதையை அடைத்துள்ளார். இது குறித்து துளசிதாஸ் கேட்டபோது, ரவீந்திரன் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக துளசிதாஸ் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.














