ராமன்துறை பகுதியைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் (52) என்பவர் முள்ளூர்துறை பகுதியில் சொந்தமாக சொத்து வாங்கி காம்பவுண்டு சுவர் கட்ட பணியாளர்களுடன் சென்றிருந்தார். அப்போது சுரேஷ் தலைமையிலான 34 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சொத்துக்குள் அத்துமீறி நுழைந்து, பணியாளர்களைத் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்து காம்பவுண்டு சுவரை உடைத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக குழித்துறை நடுவர் நீதிமன்றம் 2 உத்தரவின் பேரில் புதுக்கடை போலீசார் 34 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.














