புதுக்கடை அருகே பைங்குளத்தில் குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி சட்டவிரோதமாக போராட்டம் நடத்தியதாக இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் பழனிபாலன் உட்பட 26 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.














