குலசேகரம் விளையாட்டு மைதானத்தில் நேற்று, பாம்பு தாறா என்ற நீர் வாழ் பறவை ஒன்று அதன் அலகில் நூல் சிக்கியதால் பறக்க முடியாமல் சோர்வாக கிடந்தது. மாவட்ட விவசாய காங்கிரஸ் தலைவர் எபனேசர் இதைக் கண்டு, நூலை அறுத்து அகற்றி, வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். வனத்துறையினர் பறவைக்கு முதலுதவி அளித்து பேச்சிப்பாறை அணையில் விட்டனர்.














