விதை சட்ட வரைவை உடனே திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசுக்கு சீமான் கோரிக்கை

0
22

வேளாண்​மையை தனி​யார் நிறு​வனங்​களுக்கு தாரை​வார்க்​கும் விதை சட்ட வரைவை நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்ற முயற்​சிப்​ப​தாக மத்​திய அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: இந்​திய விதை சட்​டம் 1966 மற்​றும் விதை கட்​டுப்​பாட்டு ஆணை 1983 ஆகிய​வற்றை மாற்​றி, நாடு முழு​வதும் விவ​சா​யிகளுக்கு விற்​கப்​படும் அனைத்து விதைகளின் தரம், உற்​பத்​தி, விற்​பனையை ஒழுங்​குபடுத்​துகிறோம் என்ற பெயரில், விதை சட்ட வரைவு-2025 என்ற புதிய வரைவை பாஜக அரசு நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்ற முயல்​வது கண்​டனத்​துக்​குரியது.

இதன்​மூலம் நாடு முழு​வதும் பதிவு செய்​யப்​பட்ட, சோதிக்​கப்​பட்ட விதைகளை மட்​டுமே சந்​தை​யில் விற்​பனை செய்​ய​முடி​யும். வேளாண் மக்​கள், தங்​களது தற்​சார்பு வாழ்​வியல் உரிமையை இழந்​து, விதைகளுக்​காக கையேந்தி நிற்க வைக்​கப்​படு​வர்.

தனி​யார் நிறு​வனங்​கள் தரு​வது​தான் விதை, அவர்​கள் நிர்​ண​யிப்​பது தான் விலை என்ற நிலையை உரு​வாக்​கு​வது, பெரும் பஞ்​சம் ஏற்பட வழி​வகுத்து நாட்டை பேரழிவை நோக்கி அழைத்​துச்​செல்​லும்.

விதை உரிமையை மொத்​த​மாக தனி​யாருக்​குத் தாரை வார்த்​து, நாட்டு மக்​கள் நீண்ட வரிசை​யில் உணவுக்கு கையேந்த வைக்​கும் கொடுமை​யும் அரங்​கேறு​வதற்​கான தொடக்​கமே இப்​பு​திய சட்ட வரைவு.

எனவே, வேளாண்​மையை தனி​யார் நிறு​வனத் தொழிலாக்​கும் விதை சட்ட வரைவு 2025-ஐ மத்​திய பாஜக அரசு எக்​காரணம் கொண்​டும் நிறைவேற்​றக் கூடாது. அதை உடனடி​யாக திரும்​பப்​பெற வேண்​டும்​. இவ்​வாறு சீமான்​ வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here