கன்னியாகுமரி மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கான தேர்தல் நேற்று நாகர்கோவில் கோணத்தில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் இதில் கலந்துகொண்டு தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தேர்ந்தெடுக்கப்படும் தொழிற்சங்கம் முறைப்படியான தொழிற்சங்கமாக அறிவிக்கப்படும்.














