குழித்துறை, கல்லுகெட்டியில் மணி என்பவர் நடத்தி வரும் கடையில், நித்திரவிளை வின்ஸ் (30) என்பவர் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் தரவில்லை. இதை முதியவர் பாலகிருஷ்ணன் (60) தட்டிக்கேட்டதால், வின்ஸ் அவரை அடித்து உதைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணனை மீட்ட அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து வின்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.














