செங்கோட்டையில் ஜனவரி 26-ம் தேதியே தாக்குதல் நடத்த சதி?

0
13

டெல்லி செங்​கோட்​டை​யில் கடந்த ஜனவரி 26ம் தேதியே தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்​ட​தாக​வும் அந்த முயற்சி முறியடிக்​கப்​பட்​ட​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்​ளது.

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) வசம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து காவல் துறை உயர் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: ”கைது செய்​யப்​பட்​டுள்ள மருத்​து​வர் முஜம்​மிலிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட செல்​போனை ஆய்வு செய்து வரு​கிறோம். குறிப்​பாக, அவர் தாக்​குதலுக்கு முன்பு யாருடன் தொடர்பு கொண்​டார் என்​பதை ஆய்வு செய்​தோம்.

அப்​போது அந்த செல்​போனில் அழிக்​கப்​பட்ட சில தரவு​கள் மீட்​டெடுக்​கப்​பட்​டன. இதன்​படி, கடந்த ஜனவரி முதல் வாரத்​தில் டெல்லி செங்​கோட்டை மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் முஜம்​மில் சுற்​றித் திரிந்​தது அவருடைய செல்​போன் சிக்​னல் மூலம் தெரிய​வந்​துள்​ளது. மேலும் முஜம்​மிலும் மருத்​து​வர் உமர் நபி​யும் டெல்லி செங்​கோட்டை பகு​திக்கு அடிக்​கடி வந்து சென்​றது அப்​பகு​தி​யில் உள்ள சிசிடிவி கேம​ராக்​களை ஆய்வு செய்​த​தில் தெரிய​வந்​துள்ளது.

கடந்த ஜனவரி 26ம் தேதி நடை​பெற்ற குடியரசு தின விழா​வின்​போது தாக்​குதல் நடத்​து​வதற்​காக திட்​ட​மிட்​டு, பாது​காப்பு ஏற்​பாடு​களை நோட்​ட​மிடு​வதற்​காக அவர்​கள் அங்கு வந்து சென்​றிருக்​கலாம் என சந்​தேகிக்​கப்​ படு​கிறது. ஆனால் பாது​காப்​புப் படை​யினர் தீவிர ரோந்து பணி​யில் ஈடு​பட்​ட​தால் அவர்​களு​டைய திட்​டம் நிறைவேறாமல் போயிருக்​கலாம்” இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here