ஜெய்​ஷ் இ முகமது அமைப்பில் சேர்ந்த தீவிரவாதி உமர் மனைவி

0
10

புல்​வாமா தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்​ட​வரின் மனைவி சில வாரம் முன்பு ஜெய்​ஷ்-இ-​முகமது அமைப்​பில் சேர்ந்​தது தெரிய​வந்​துள்​ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா நகரில் பாது​காப்​புப் படை​யினரின் வாக​னங்​கள் மீது தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். இதில் 41 வீரர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்ட உமர் பாருக்​கின் (என்​க​வுன்ட்​டரில் கொல்​லப்​பட்​டார்) மனைவி அபிரா பிபி, ஜெய்​ஷ்-இ-​முகமது அமைப்​பின் மகளிர் பிரி​வான ஜமாத்​-உல்​-மொமினட்​டில் கடந்த சில வாரங்​களுக்கு முன்பு சேர்ந்​தார். அவருக்கு அந்த அமைப்​பின் ஆலோ​சனைக் கவுன்​சில் தலை​வர் பொறுப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

ஐ.நா.சபை​யால் சர்​வ​தேச தீவிர​வா​தி​யாக அறிவிக்​கப்​பட்​டுள்ள மசூத் அசா​ரின் இளைய சகோ​தரி சாதியா அசார் இந்த அமைப்​பின் தலை​வ​ராக செயல்​பட்டு வரு​கிறார். இப்​போது அபிரா பிபி சாதி​யா​வுடன் இணைந்து செயல்​பட்டு வரு​கிறார். இவர் அந்த அமைப்​பில் இணைந்த சில வாரங்​களில் டெல்​லி​யில் கார் குண்​டு​வெடிப்பு சம்​பவம்​ நடந்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here