ஆந்திராவில் மீண்டும் பேருந்தில் தீ விபத்து: ஓட்டுனர், நடத்துனர் உட்பட 7 பேர் உயிர் தப்பினர்

0
19

ஆந்​திரா மற்​றும் தெலங்​கானா மாநிலங்​களில் தொடர்ந்து பேருந்து விபத்​துகள் நடை​பெற்று வரு​வ​தால் பொது​மக்​கள் பீதி அடைந்​துள்​ளனர். கடந்த மாதம் 24-ம் தேதி கர்​னூல் அருகே பேருந்து தீப்​பற்றி 20 பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்த விபத்து அனை​வரை​யும் உலுக்​கியது. இதை தொடர்ந்து தெலங்​கானா மாநிலம், ரங்​காரெட்டி மாவட்​டத்​தில் தாண்​டூரு அருகே கடந்த 3-ம் தேதி அரசு பேருந்து மீது டிப்​பர் லாரி மோதி​ய​தில் 21 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

இந்​நிலை​யில், ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் இருந்து ஒடிசா மாநிலம் ஜெயபுரா எனும் ஊருக்கு ஒடிசா மாநில அரசு பேருந்து நேற்று சென்று கொண்​டிருந்​தது. அப்​போது ஆந்​திரா -ஒடிசா எல்​லை​யில், பார்​வ​திபுரம் மன்​யம் மாவட்​டம், ரொட்​ட​வலசா எனும் இடத்​தில் நேற்று காலை 7.45 மணி​யள​வில், திடீரென அந்த பேருந்​திலிருந்து புகை​யும், நெருப்​பும் கிளம்​பியது.

அதை கவனித்த ஓட்​டுநர், பேருந்தை சாலை ஓரத்​தில் நிறுத்​தி, 5 பயணி​களை அவசர​மாக கீழே இறங்​கி​விட்​டார். சற்று நேரத்​திலேயே பேருந்து முழு​வதும் தீப்​பிடித்து எரிந்து முற்​றி​லும் நாச​மானது. ஓட்​டுநர் உரிய நேரத்​தில் கவனித்​த​தால் அவரும், நடத்துனர் மற்​றும் 5 பயணி​கள் என மொத்​தம் 7 பேர் உயிர் தப்​பினர்.

தகவல் அறிந்​ததும், ஆந்​திர போலீ​ஸார், தீயணைப்பு படை​யினர் சென்று தீயை முழு​வது​மாக அணைத்​தனர். அமைச்​சர் சந்​தியா ராணி இது தொடர்​பாக விசா​ரணை நடத்த உத்​தர​விட்​டுள்​ளார். வெளி மாநிலங்​களில் இருந்து வரும் பேருந்​துகள் சரிவர உள்​ள​தா? என அறிக்கை தர வேண்​டுமென அவர் அதி​காரி​களுக்​கு உத்​தர​விட்​டுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here