முக்கிய பெண் நக்சலைட் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரண்

0
15

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்​திற்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு உறு​திபூண்​டுள்​ளது. இதையொட்டி நக்​சலைட்​களுக்கு எதி​ராக கடும் நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. அதே​நேரத்​தில் சரண் அடைவோருக்கு அரசு மறு​வாழ்வு அளித்து வரு​கிறது. . சத்​தீஸ்​கரில் கடந்த மாதம் மட்​டும் சுமார் 300 நக்​சலைட்​கள் சரண் அடைந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில் சத்​தீஸ்​கரின் கேசிஜி (கை​ராகர்​-சுய்​காடன்​-கண்​டாய்) மாவட்​டத்​தில் முக்​கிய பெண் நக்​சலைட் ஒரு​வர் நேற்று சரண் அடைந்​தார். கமலா சோடி (30) என்ற இவர், சத்​தீஸ்​கரின் சுக்மா மாவட்​டம், ஆர்​லம்​பள்ளி கிராமத்தை சேர்ந்​தவர்.

தடை செய்​யப்​பட்ட சிபிஐ (மாவோ​யிஸ்ட்) அமைப்​பில் கடந்த 14 ஆண்​டு​களாக செயல்​பட்டு வந்த இவர், ஆட்​கள் தேர்​வு, பிரச்​சா​ரம், தாக்​குதலுக்​கான திட்​ட​மிடல் உள்​ளிட்ட அமைப்பு ரீதியி​லான பணி​களி​லும் வன்​முறை​களி​லும் ஈடு​பட்டு வந்​துள்​ளார்.

இவரை பற்​றிய தகவலுக்கு ம.பி., சத்​தீஸ்​கர் மற்​றும் மகா​ராஷ்டி​ரா​வில் கூட்​டாக 17 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்​த​தாக போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here