கடந்த 2022-ம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்த முகம்மது ஷரீப் ஷா என்பவர் ஜம்முவில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜதீந்தர் சிங் என்கிற பாபு சிங்கிடம் ரூ.6.9 லட்சம் ஹவாலா பணத்தை கொடுக்க முயன்றபோது போலீஸாரிடம் பிடிபட்டார்.
இந்தப் பணம் இந்தியாவில் போதைப் பொருள் விற்பனை மூலம் ஈட்டப்படுவதும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாபு சிங் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் போதைப் பொருள் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் பாபு சிங்கின் வீடு உட்பட 8 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.














