ஹரியானாவில் பயிற்சி வகுப்பு முடித்து வீடு திரும்பிய மாணவியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்

0
15

தலைநகர் டெல்​லி​யின் எல்​லை​யி​லிருந்து 40 கி.மீ. தொலை​வில் ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத் மாவட்​டத்​தில் உள்ள பல்​லப்​காரில் பயிற்சி வகுப்பு முடித்து மாணவி ஒரு​வர் தனது இரண்டு தோழிகளு​டன் வீடு திரும்​பி​க்கொண்டிருந்தார்.

அப்​போது அந்த வழி​யில் இளைஞர் ஒரு​வர் கையில் பையுடன் இருசக்கர வாக​னத்​தில் காத்​திருந்​தார். அவரின் அருகே அந்த மாணவி வந்​ததும் பின்​தொடர்ந்து சென்ற அந்த இளைஞர் தனது பையில் மறைத்து வைத்​திருந்த துப்​பாக்​கியை எடுத்து மாண​வியை நோக்கி சுட்​டார்.

இதில், ஒரு குண்டு அந்த மாண​வி​யின் தோளி​லும், மற்​றொன்று அவரது வயிற்​றி​லும் பாய்ந்​தது. இதையடுத்​து, வலி​யால் கதறித்​ துடித்த அந்த மாண​வியை உடன் வந்த அவரது நண்​பர்​கள் மீட்டு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​துள்​ளனர்.

படு​காயமடைந்த அந்த பெண்​ணுக்கு தற்​போது மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. மாணவி மீது இளைஞர் துப்​பாக்​கி​யால் சுட்ட சிசிடிவி பதிவு​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி உள்​ளது.

இதுகுறித்து காவல் துறை செய்​தித்​தொடர்​பாளர் கூறுகை​யில், “முதல்​கட்ட விசா​ரணை​யில் தாக்​குதல் நடத்​திய ஜதின் மங்​கலாவை அந்த மாணவிக்கு முன்பே தெரிந்​துள்​ளது. அவரை தேடி வருகிறோம். தாக்​குதலுக்கு பயன்​படுத்​திய துப்​பாக்​கியை கைப்​பற்றி அந்த இளைஞர் மீது எப்​ஐஆர் பதிவு செய்துள்ளோம்’’ என்​றார்.

இதுகுறித்து பாதிக்​கப்​பட்ட பெண்​ணின் சகோதரி கூறுகை​யில், “வாரி​யத் தேர்​வுக்கு அவள் தயா​ராகி வரு​கிறாள். தின​மும் ஒரே வழி​யில் வீடு திரும்​பும் அவரை நோட்​ட​மிட்டு பைக்​கில் காத்​திருந்து ஜதின் மங்​கலா இந்த தாக்​குதலை நடத்தி உள்​ளார். ஏற்​கெனவே பலமுறை பின்​தொடர்ந்து அவர் தொல்லை கொடுத்​துள்​ளார்.

இதுகுறித்து அவரது குடும்​பத்​தா​ரிட​மும் தெரி​வித்​தோம். ஜதின் மங்​கலா​வின் தாயார் வருத்​தம் தெரி​வித்து இது​போன்று நடக்​காது என்று உறுதி அளித்​தார். ஆனால், மறு​நாளே ஜதின் துப்​பாக்​கிச்​ சூடு நடத்​தி​யுள்​ளார்​’’ என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here