பிஹாரில் 3 ஜன் சுராஜ் வேட்பாளர்கள் வாபஸ்: பாஜக மிரட்டுவதாக பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

0
22

பிஹாரில் ஜன் சுராஜ் வேட்​பாளர்​கள் 3 பேர் தங்​கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்​றுள்​ளனர். இதற்கு பாஜக.,​வின் அச்​சுறுத்​தல் காரணம் என ஜன் சுராஜ் கட்​சி​யின் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

பிஹார் சட்​டப் பேரவை தேர்​தல் அடுத்த மாதம் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் ஜன் சுராஜ் கட்​சி​யின் 3 வேட்​பாளர்​கள் முதுர் ஷா, சத்ய பிர​காஷ் திவாரி, சசி சேகர் சின்ஹா ஆகியோர் தங்​கள் வேட்பு மனுவை திரும்ப பெற்​றுள்​ளனர். இதுகுறித்து ஜன் சுராஜ் கட்​சி​யின் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் கூறிய​தாவது:

தேர்​தலில் யார் வென்​றாலும் கவலை​யில்​லை. நாங்​கள்​தான் ஆட்சி அமைப்​போம் என்ற பிம்​பத்தை பாஜக கடந்த சில ஆண்​டு​களாக உரு​வாக்​கி​யுள்​ளது. ஆனால், புதிய கட்​சி​யான ஜன் சுராஜ் கட்​சியை கண்டு தே.ஜ. கூட்​டணி பயப்​படு​கிறது.

ஜன் சுராஜ் கட்சி வேட்​பாளர்​கள் தங்​கள் வேட்பு மனுக்​களை வாபஸ் பெற வற்​புறுத்​தப்​பட்​டுள்​ளனர். வழக்​க​மாக பாஜக, ‘‘எங்​களுக்கு ஓட்டு போடுங்​கள், இல்​லை​யென்​றால் லாலு​வின் காட்​டாட்சி மீண்​டும் திரும்​பி​விடும் என மக்​களை பாஜக வழக்​க​மாக அச்​சுறுத்​தும். ஆனால் இந்த முறை ஜன் சுராஜ் என்ற புதிய கட்​சிக்கு வாக்​களிக்​கும் வாய்ப்பு மக்​களுக்கு ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் எங்​கள் கட்​சி​யின் தனாபூர் வேட்​பாளர் முதுர் ஷாவுக்கு அழுத்​தம் கொடுத்து மனுவை வாபஸ் பெற வைத்​துள்​ளனர். இந்த அச்​சுறுத்​தல் காரண​மாக பாஜக.,வுக்கு வாக்​களிக்க கூடாது என தனாபூர் மக்​கள் முடிவு செய்​துள்​ளனர்.

முதுர் ஷாவை ராஷ்ட்​ரிய ஜனதா தள கட்​சி​யினர் கடத்​தி​ய​தாக பாஜக தலை​வர்​கள் கூறினர். ஆனால், அவர் மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, தர்​மேந்​திர பிர​தான் ஆகியோ​ருடன் உள்ள போட்டோ வெளிவந்​துள்​ளது. இந்த விவகாரத்தில் தேர்​தல் ஆணை​யம் தலை​யிட வேண்​டும். எத்​தனை வேட்​பாளர்​களை பாஜக இழுத்​தா​லும், நாங்​கள் இந்த தேர்​தலில் கடுமை​யாக போ​ராடு​வோம்​. பிஹாரில்​ மாற்​றம்​ வரும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here