ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 2.7 கிலோ தங்கம், 17 டன் தேன் பறிமுதல்

0
33

மத்​திய பிரதேசத்​தில் ஓய்வு பெற்ற அரசு அதி​காரி வீடு​களில் இருந்து 2.7 கிலோ தங்​கம், 5.5 கிலோ வெள்​ளி, 17 டன் தேன், பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்டு உள்​ளன.

மத்​திய பிரதேச பொதுப் பணித் துறை​யில் தலைமை பொறி​யாள​ராக கோவிந்த் பிர​சாத் மெஹ்ரா பணி​யாற்​றி​னார். கடந்த ஆண்டு பிப்​ர​வரி​யில் அவர் ஓய்வு பெற்​றார். இதன்​பிறகு தலைநகர் போபாலில் உள்ள வீட்​டில் அவர் வசித்து வந்​தார். அவர் பணி​யில் இருந்​த​போது பெரு​மள​வில் ஊழல் செய்து கோடிக்​கணக்​கில் சொத்து குவித்​திருப்​ப​தாக புகார் எழுந்​தது.

இது தொடர்​பாக மத்​திய பிரதேச லோக் ஆயுக்தா போலீ​ஸார் போபால் மற்​றும் நர்​ம​தாபுரம் பகு​தி​களில் மெஹ்​ரா​வுக்கு சொந்​த​மான 4 வீடு​களில் நேற்று முன்​தினம் ஒரே நேரத்​தில் சோதனை நடத்​தினர்.

இந்த வீடு​களில் இருந்து 2.7 கிலோ தங்க நகைகள். 5.5 கிலோ வெள்ளி பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. மேலும் ரூ.35 லட்​சம் ரொக்​கம், பல கோடி மதிப்​புள்ள சொத்து ஆவணங்​களும் கைப்​பற்​றப்​பட்​டன. மெஹ்ரா தரப்​பில் சைனி கிராமத்​தில் 32 சுற்​றுலா விடு​தி​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன.

சொகுசு வாகனங்கள்: மேலும் பிவிசி பைப் தயாரிக்​கும் ஆலை, பல்​வேறு பண்ணை வீடு​களும் அவரது குடும்​பத்​தினர் பெயர்​களில் இருப்​பது தெரிய வந்​துள்​ளது. ஒரு பண்ணை வீட்​டில் இருந்து 17 டன் தேன் பறி​முதல் செய்​யப்​பட்டு இருக்​கிறது.

மெஹ்​ரா​வின் வீடு​களில் இருந்து ஏராள​மான சொகுசு வாக​னங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்டு உள்​ளன. இந்த வாக​னங்​களின் மதிப்பு சில கோடிகளை தாண்​டும் என்று தெரி​கிறது. இதுகுறித்து லோக் ஆயுக்தா போலீ​ஸார் கூறிய​தாவது:

ஓய்வு பெற்ற அரசு அதி​காரி கோவிந்த் பிர​சாத் மெஹ்ரா வீடு​களில் இருந்து கிலோ கணக்​கில் தங்க நகைகள், வெள்ளி பொருட்​களை பறி​முதல் செய்​திருக்​கிறோம். ஏராள​மான சொத்து பத்​திரங்​களை​யும் கைப்​பற்றி உள்​ளோம். இவற்​றின் மதிப்பு சுமார் ரூ.60 கோடி ஆகும். அடுத்​தகட்​ட​மாக மெஹ்​ரா​வின் 2 மகன்​கள் மற்​றும் உறவினர்​கள் வீடு​களில் சோதனை நடத்த திட்​ட​மிட்டு உள்​ளோம். இவ்​வாறு லோக்​ ஆயுக்​தா போலீ​ஸார்​ தெரிவித்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here