குளச்சல் கடற்கரையில் நேற்று ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக ஏராளமான பொதுமக்கள் சூரியன் மறையும் அழகை கண்டு களிக்க குவிந்தனர். குடும்பத்துடன் மணற்பரப்பில் அமர்ந்து உரையாடினர். அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் கடலுக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. கடற்கரை பரப்பில் அமர்ந்து கடல் அழகை ரசித்து சென்றனர்.














