நாகர்கோவிலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த கொற்றிக்கோடு போலீஸ் நிலைய எஸ்எஸ்ஐ தமிழ்செல்வன் (55), அவரது மனைவி அனி (48) மற்றும் கல்லூரி மாணவர் ஐசக் ரோஷன் ஆகியோர், தக்கலை அருகே கல்லூரி மாணவர் ஓட்டி வந்த மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்தனர். அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.