புதுக்கடை அருகே ஹெலன்நகர் கடற்கரை கிராம பகுதியை சேர்ந்தவர் சஜின் மனைவி சினி (29). இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தற்போது இனயம் திருப்பு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சினியின் கணவர் வழக்கு சம்பந்தமாக கைதாகி பாளையங்கோட்டை சிறையில் உள்ளார். இதனால் மனைவி சினி மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வாடகை வீட்டில் சினி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Latest article
குமரி எஸ்பி அலுவலகத்தில் பாஜகவினர் புகார் மனு
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் நடைபெற்ற ஜீவா விழாவில் யூடியூபர் செந்தில் வேல் ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேசியதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைக் கண்டித்து, பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பாஜக சார்பில் மனு...
நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை: அறிவிப்பு
நாகர்கோவில் மற்றும் தாம்பரம் இடையே சிறப்பு ரயில் சேவை இம்மாதம் 26ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை இயக்கப்படும். நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11:15 மணிக்கு புறப்படும்...
குமரியில் கனரக வாகனங்களால் விபத்து: தமுமுக வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில், குறிப்பாக குளச்சல், திக்கணங்கோடு, கருங்கல், மார்த்தாண்டம், தக்கலை, பார்வதிபுரம் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதமும், காயங்களும் ஏற்படுவதாக தமிழ்நாடு முஸ்லிம்...