புதுக்கடை அருகே ஹெலன்நகர் கடற்கரை கிராம பகுதியை சேர்ந்தவர் சஜின் மனைவி சினி (29). இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தற்போது இனயம் திருப்பு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சினியின் கணவர் வழக்கு சம்பந்தமாக கைதாகி பாளையங்கோட்டை சிறையில் உள்ளார். இதனால் மனைவி சினி மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வாடகை வீட்டில் சினி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














