புதுக்கடை அருகே ஹெலன்நகர் கடற்கரை கிராம பகுதியை சேர்ந்தவர் சஜின் மனைவி சினி (29). இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தற்போது இனயம் திருப்பு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சினியின் கணவர் வழக்கு சம்பந்தமாக கைதாகி பாளையங்கோட்டை சிறையில் உள்ளார். இதனால் மனைவி சினி மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வாடகை வீட்டில் சினி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Latest article
தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு
தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....
அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்
அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...
கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது
கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...














