குளச்சல் போலீஸ் உதவி போலீஸ் கண்காணிப்பாளராக பதவி வகித்தவர் பிரவீன் கவுதம். இவர் குளச்சல் சப் டிவிஷனில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏ எஸ் பி யாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் சிலர் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் கௌதம் பதவி உயர்வு பெற்று திருப்பூர் வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு பதவி காலியாக உள்ளது.