கிள்ளியூர்: 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

0
135

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகளை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் சார்பில் கீழ்குளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜோர்தான், கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் இராஜசேகரன், கிள்ளியூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் கோபால், கீழ்குளம் பேரூராட்சித் தலைவர் சரளா கோபால், கீழ்குளம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் ராஜகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத் துறை மருத்துவர்கள், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here