குளச்சல்: 22 பவுன் நகை, பணம் மோசடி; 3 பேர் மீது வழக்கு

0
177

குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதி சேர்ந்தவர் செல்வநாயகம் (87) ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர். இவரது மனைவி நாகம்மாள் (75) இவரும் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர். இவர்கள் 3 மகன்களும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியின் கடைசி மகன் வீட்டில் உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த சுகுமார் (49) என்பவர் கடந்த 2022 மார்ச் மாதம் முதல் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். சுகுமார் நாகம்மாளிடமிருந்து சிறிது சிறிதாக 22 பவுன் நகை இரவல் வாங்கினார். 

மேலும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த மே மாதம் பணம் கேட்டபோது சுகுமார் தகாத வார்த்தைகளால் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் செல்வநாயகம் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது நகை பணத்தை திருப்பி கொடுப்பதாக ஒப்புக்கொண்ட சுகுமார், பின்னர் நகைகளை திருப்பி கொடுக்கவில்லை. இதையடுத்து செல்வநாயகம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

மனு விசாரித்த நீதிமன்றம் சுகுமார், அவர் மனைவி பேபி (47), மகள் சுமித்ரா (25) மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. குளச்சல் போலீசார் மூன்று பேர் மீதும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர். சுகுமார் அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here