அனைத்து மெமு வகை ரயில்களிலும் ஜூன் முதல் தலா 4 கழிப்பறை: ரயில்வே அதிகாரிகள் தகவல்

0
103

அனைத்து மெமு வகை ரயில்களிலும் ஜூன் முதல் தலா 4 கழிப்பறைகள் வசதி ஏற்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வேஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ், சென்னை கடற்கரை – தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு மார்க்கம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கம் உட்பட பல்வேறு மார்க்கங்களில் தினசரி 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர காட்பாடி– அரக்கோணம், சென்னை கடற்கரை – மேல்மருவத்துார், திருத்தணி – சென்ட்ரல், பித்ரகுண்டா – சென்ட்ரல் உட்பட பல்வேறு தடங்களில் 12-க்கும் மேற்பட்ட மெமு வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் குற்றச்சாட்டு: இவை அனைத்தும் குறுகியதூர மின்தொடர் பயணிகள்ரயில்களாக இயக்கப்படுகின் றன. இதில், கழிப்பறை வசதி இருக்கிறது. ஆனால், போதிய அளவில் இல்லை. பெரும்பாலான நேரங்களில் இவை தூய்மையின்றி துர்நாற்றம் வீசு வருகின்றன என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் மொத்தம் 12 மெமு வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன. 9 மெமு ரயில்களில் தலா 4 கழிப்பறைகள் வசதியும், 3 மெமு ரயில்களில் தலா 2 கழிப்பறைகள் வசதியும் உள்ளது. இவற்றில் கூடுதலாக 4 கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஜூன் மாதம் முதல் அனைத்து மெமுவகை ரயில்களிலும் தலா 4 கழிப்பறைகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூடுதல் கழிப்பறை வேண்டும்: இதுகுறித்து திருவள்ளூர் ரயில் பயணிகள் நலச் சங்கசெயலாளர் பாஸ்கர் கூறும் போது, “8 பெட்டிகள் கொண்டமெமு ரயிலில் மொத்தம் 4கழிப்பறைகள் தான் வழங்கப் படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு பெட்டியிலும் குறைந்தபட்சம் 2 கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும். சாதாரண ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் 4 கழிப்பறைகள் உள்ளன. அதேபோல, மெமு ரயிலிலும் ஒவ்வொரு பெட்டியிலும் போதிய கழிப்பறைகளை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here