Home 2024
Yearly Archives: 2024
பெப்பர் சால்ட் லுக், ஈர்க்கும் சிரிப்பு… அஜித்தின் புது கெட்டப் வைரல்!
சென்னை: அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அவரின் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த புகைப்படங்கள் அதிகாரபூர்வமற்று இணையத்தில் பரவி வந்த நிலையில், தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்ந்திரன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தின் கெட்டப் ரசிகர்களை கவர்ந்தது. அதில் முழுக்க வெள்ளை தாடி, வெள்ளை முடியுடன் இருந்தார் அஜித். கிட்டத்தட்ட அதன் இன்னொரு வெர்ஷனாக ‘விடாமுயற்சி’யிலும் அதே கெட்டப்பில் இருப்பதாக படக்குழு வெளியிட்ட போஸ்டர்களில் தெரிந்தது. ஆனால், தற்போது அவர்...
வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ டப்பிங் பணிகள் தொடக்கம்!
சென்னை: வெற்றிமாறன் இயக்கி வரும் ‘விடுதலை 2’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சூரி, விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்கள் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின்...
வேட்டையன் Review: ஞானவேலின் ‘மெசேஜ்’ + ரஜினியின் ‘மாஸ்’ கலவை எப்படி?
’ஜெய் பீம்’ படம் மூலம் தமிழ் சினிமா பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் த.செ.ஞானவேலும், ‘ஜெயிலர்’ பெற்ற வெற்றியை தக்கவைக்கும் முனைப்பில் இருந்த ரஜினியும் கைகோத்துள்ள படம்தான் ‘வேட்டையன்’. டீசர், ட்ரெய்லர் வெளியானபோதே என்கவுன்டரை நியாயப்படுத்தும் காட்சிகளுக்காக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்களுக்கான விடை படத்தில் இருந்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
தமிழகத்தின் பிரபலமான என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி அதியன் (ரஜினிகாந்த்). ‘தாமதமான நீதி... மறுக்கப்பட்ட நீதி’ என்ற கொள்கையுடன் மோசமான ரவுடிகளை என்கவுன்டர் செய்து வருபவர். இன்னொரு பக்கம் என்கவுன்டருக்கு...
ரத்தன் டாட்டா மறைவுதொழிலதிபர் டாக்டர் சுஜின் ஜெகேஷ் இரங்கல்
புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவிற்கு தொழிலதிரும், மெட்ரையிட் நிறுவன தலைவருமான டாக்டர் சுஜின் ஜெகேஷ் அறிக்கை மூலம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது; இந்தியாவில் வசிக்கும் நடுத்தர மக்களின் கார் வாங்கும் கனவை நிறைவேற்றவே ஒரு இலட்சம் ரூபாய் விலையுள்ள டாட்டா நானோ காரை பல்வேறு சவால்களுக்கிடையே அறிமுகப்படுத்தினார் ரத்தன் டாடா. தனது பணிவு, இரக்கம், மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க...
பெங்களூருவில் தங்கியிருந்த மேலும் 14 பாகிஸ்தானியர்கள் கைது
பெங்களூரு: போலி பாஸ்போர்ட் மூலம் பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.
வங்க தேசம், மியான்மர், பாகிஸ்தான் உட்பட அண்டை நாடுகளைச் சேர்ந்த பலர் இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஜிகனியில் குடும்பத்தார் 4 பேருடன் வசித்து வந்த பாகிஸ்தானியர் ஒருவர் கடந்த மாதம் 29-ம்தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சட்டவிரோதமாக போலி பாஸ்போர்ட்மூலம் பெங்களூருவில் தங்கிஇருந்த மேலும் 4 பேர்கடந்த 6-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சந்தேகத்துக்குரிய...
ஹரியானா தேர்தலில் வெற்றிபெற்ற 2 சுயேச்சை எம்எல்ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்
புதுடெல்லி: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் கணவுர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தேவேந்தர் கட்யான். அதேபோன்று, பகதுர்கா தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரை தோற்கடித்தவர் ராஜேஷ்ஜூன். இவர்கள் இருவரும், மத்தியஅமைச்சரும், ஹரியானா மாநில தேர்தல் பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதான் இல்லத்தில் ஹரியானா மாநில பாஜக தலைவர் லால் படோலி முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தனர்.
சாவித்ரி ஜிண்டால் ஆதரவு: இதனிடையே, பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு ஹரியானாவின் ஹிசார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சாவித்ரி ஜிண்டாலும் பாஜக அரசுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து...
வெற்றியை தோல்வியாக்கும் கலையை காங்கிரஸிடம் கற்கலாம்: ஹரியானா தோல்வி குறித்து கூட்டணி கட்சி கிண்டல்
ஹரியானா தேர்தலில் காங்கிரஸ்கட்சி வெல்லும் என தேர்தல்கருத்து கணிப்புகள் தெரிவித்தன.ஆனால் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் கடும் விமர்சனம் செய்துள்ளன.
இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா(உத்தவ் அணி) கட்சி பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணம் குறித்து கூறியிருப்பதாவது: ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்முடிவுகள் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளன. ஹரியானாவில் காங்கிரஸ் கட்சிக்குஏற்பட்ட தோல்விக்கு அதீத தன்னம்பிக்கை...
ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு
மும்பை: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவை ஒட்டி இன்று (அக்.10) ஒரு நாள் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மேலும், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் இறுதிச் சடங்கில் மத்திய அரசின் சார்பில் அமித் ஷா கலந்து கொள்கிறார்.
முன்னதாக, உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா நேற்று (புதன்கிழமை) இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு...
திருப்பதி பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா: ஹனுமன் வாகனத்தில் மலையப்பர் வீதியுலா
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்தில் உற்வச மூர்த்தி மலையப்பர் எழுந்தருளினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின் 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பர் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வாகன சேவையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கலை நிகழ்ச்சிகள்: மாட வீதிகளில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடனக்...
ரத்தன் டாடா இந்தியர்களின் இதயம் கவர்ந்த தொழிலதிபர் ஆனது எப்படி?
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு தேசத்தையே கலங்க செய்துள்ளது. அவரது மறைவு செய்தியை அறிந்து தொழில் துறையினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடைந்துள்ளனர். தொழிலதிபரான அவர் இந்தியர்களின் இதயங்களை வென்றது எப்படி என பார்ப்போம்.
அக்.9 (புதன்கிழமை) மாலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 86 வயதான ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ‘வழக்கமான மருத்துவ பரிசோதனைதான்’ என தனது ஹெல்த் அப்டேட்டை அவரே கொடுத்திருந்தார். இந்தச் சூழலில்தான்...














