மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் குகி மற்றும் மைதேயி தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணிப்பூரில் மைதேயி, குகி இனத்தவர்களுக்கு இடையில் கடந்த 2023 மே மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் மோதலில் பலர் கொல்லப்பட்டனர். பலரை காணவில்லை. பலர் மாநிலத்தை விட்டு வெளியேறினர். இந்நிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி கடந்த வாரம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு அமைதியை நிலைநாட்ட சிஆர்பிஎப் வீரர்கள், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான பகுதிகளில் அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், குகி தேசிய படையை (கேஎன்ஏ) சேர்ந்த தீவிரவாதிகள் 7 பேரை பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய்தனர். சுராசந்த்பூர் பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது அவர்கள் சிக்கினர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இம்பால் கிழக்கு மாவட்டம் ஹூய்காப் கிராமத்தில் நடை பெற்ற மற்றொரு தேடுதல் வேட்டையில் மைதேயி தீவிரவாத அமைப்பான கங்கிலீ பாக் கம்யூ னிஸ்ட் அமைப்பை (மக்கள் போர்க் குழு அல்லது கேசிபி) சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.