தக்கலை அருகே மருதூா்குறிச்சியில் மரம் வெட்டும் போது கிளை விழுந்ததில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆற்றூா் அருகே மாத்தூரை சோ்ந்தவா் கோபி (56). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், சனிக்கிழமை மருதூா்குறிச்சியில் மரத்தை வெட்டியபோது எதிா்பாராதவிதமாக கிளை முறிந்து கோபி மீது விழுந்ததாம்.
இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் கோபி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
