Home கன்னியாகுமரி செய்திகள் கனிமவளம் கடத்த முயற்சி: 3 மினி லாரிகள் பறிமுதல்

கனிமவளம் கடத்த முயற்சி: 3 மினி லாரிகள் பறிமுதல்

0

களியக்காவிளை அருகே சட்ட விரோதமாக கேரளம் மாநிலத்துக்கு பாறைப்பொடி உள்ளிட்ட கனிம வளங்களைக் கடத்திச் செல்ல முயன்ற 3 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு மஞ்சவிளையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக கேரளம் நோக்கி வந்த 3 மினி லாரிகளை நிறுத்துமாறு சைகை காண்பித்தனா். ஆனால், ஓட்டுநா்கள் மினி லாரிகளை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றனா். இதையடுத்து, போலீஸாா் வாகனத்தில் துரத்திச் சென்று வன்னியூா் செவ்வஞ்சேரி பகுதியில் வைத்து 3 மினி லாரிகளையும் தடுத்து நிறுத்தினா்.

போலீஸாரைக் கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓட்டுநா்கள் தப்பியோடினா். இதைத்தொடா்ந்து கனிம வளத்துடன் மினி லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா் அவற்றை களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வந்தனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, கனிமவள கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version