Home விளையாட்டு செய்திகள் ராஜஸ்​தானுக்கு எதி​ரான போட்டியில் தோல்வி அடைந்தது ஏன்? – ஸ்ரேயஸ் ஐயர் விளக்​கம்

ராஜஸ்​தானுக்கு எதி​ரான போட்டியில் தோல்வி அடைந்தது ஏன்? – ஸ்ரேயஸ் ஐயர் விளக்​கம்

0

ஐபிஎல் தொடரில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்​கெ​தி​ரான போட்​டி​யில் எங்​களது பந்​து​வீச்சு உத்தி சரி​யாக செயல்​பட​வில்லை என்று பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரி​வித்​தார்.

நியூ சண்​டிகர் மைதானத்​தில் நேற்று முன் தினம் இரவு நடை​பெற்ற ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் அணியை வீழ்த்​தி​யது. இந்த ஐபிஎல் தொடரில் பஞ்​சாப் அணி பெற்ற முதல் தோல்​வி​யாகும் இது.

இந்த தோல்வி குறித்து பஞ்​சாப் அணி கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறிய​தாவது: இந்​தப் போட்​டி​யில் நாங்​கள் முதலில் பேட்​டிங் செய்து ரன்​களைக் குவித்​தோம். ஸ்கோர் போர்​டில் 222 ரன்​களைப் பார்த்​த​போது இது நல்ல ஸ்கோர் என்றே நினைத்​தேன்.

ஆனால், நாங்​கள் பந்​து​வீச்​சில் தோல்வி அடைந்​து​விட்​டோம். ராஜஸ்​தான் அணி வீரர்​கள் மிக சிறப்​பாக விளையாடி​னார்​கள். குறிப்​பாக ஷுபம் துபே​வும், டோனவன் பெரை​ரா​வும் மிக​வும் அபார​மாக விளை​யாடி பார்ட்​னர்​ ஷிப் அமைத்​தனர். இன்றைய நாள் எங்​களுக்கு சாதக​மாக அமைய​வில்லை. இவ்​வாறு ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்​தார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version